Skip to main content

Posts

Showing posts from October, 2017

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு ஜெ வித்யாசாகர் ராவிற்கு தனது கைபட எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு ஜெ வித்யாசாகர் ராவிற்கு தனது கைபட எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.! இதில் ஜெ வின் கையெழுத்து இடம் பெற்றுள்ளது , மேலும் பெஸ்ட் விஷ்ஷஸ் என அவர் தனது கைப்பட எழுதியுள்ளார். இது ஜெயலலிதாவின் கையெழுத்து தானா உண்மை எனில் கடிதம் எழுதும் நிலையில் இருந்த ஜெயலலிதா கைநாட்டு வைக்கும் நிலைக்கு போனது ஏன் என பல்வேறு கேள்விகள் இதனால் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றது. ஏற்கனவே உள்ள சந்தேகங்களுக்கே விடை கிடைக்காத நிலையில் இந்த கடிதம் மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

Whatsapp Status Download Without Any Application Simple Method

வருங்கால தலைமுறையை அழிக்கும் எமனாக நீட்- ஆந்திரா, தெலுங்கானாவில் 50 'அனிதாக்கள்’ தற்கொலை!

ஹைதராபாத்: நீட் தேர்வால் தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் கடந்த 2 மாதங்களில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பிளஸ் டூ தேர்வில் 95% மதிப்பெண்கள் பெற்ற சம்யுக்தா என்கிற மாணவி. இவரது தந்தை ஒரு கூலித்தொழிலாளி. மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவின் காரணமாக, கஷ்டப்பட்டு லட்சத்தில் கடன் வாங்கி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தனியார் கோச்சிங் சென்டரில் சேர்த்து இருக்கிறார் அவரது தந்தை. ஆனால், கடந்த திங்கட்கிழமை தனது வீட்டில் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார் சம்யுக்தா. அவரது மரணக் கடிதத்தில், ' என்னால் மருத்துவர் ஆக முடியுமா என்கிற பயம் தன்னை அலைக்கழிக்கிறது. அதனால் தான் இந்த முடிவு' என்று பதிவு செய்துள்ளார். எனது மகள் எப்படியாவது மருத்துவர் ஆகிவிடுவேன் இந்த மக்களுக்கு அப்போது தான் நல்லது செய்ய முடியும் என்று அடிக்கடி சொல்லுவார். கடந்த சில நாட்களாக இந்த கோச்சிங் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. பாடத்திட்டம் வேறானவை இதுவரை படித்த பாடத்திட்டமும் இதுவும் வேறுவேறாக உள்ளது என்று நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், இப்போது என் மகளை இழந்துவிட்டே...

அரசு ஊழியர்களுக்கு ஒரு சாதாரண குடிமகனின் வேண்டுகோள்

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வேண்டுமென நீங்கள் போராடிய சில நாட்களிலே அரசு ஊதிய உயர்வு அளித்துள்ளது மகிழ்சியான செய்தி இனியாவது அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதை தவிர்த்திடுங்கள்.ஒரு சிறு விவசாயின் மாத வருமானம் உஙகள் ஊதியத்தில் 4 ல் 1 பங்கு கூட இருக்க வாய்ப்பில்லை அதை வைத்துக்கொண்டுதான் அவர் வாழ்க்கையை வாழ்கிறார்.அப்படி இருக்கும் சூழலில் அவர் அடிப்படை தேவைக்காக அரசு அலுவலகங்களை நாடும் பொழுது அவரின் ஒவ்வொரு தேவைக்கும் லஞ்சம் கொடுக்கும் நிலை உள்ளது.உங்களுக்கு வேண்டுமானால் 1000 ரூபாய் எளிதாக தெரியலாம் ஆனால் அவருக்கு அது 5 நாள் உழைப்பு. உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையென்று முறையிட உங்களுக்கான சங்கங்கள் உள்ளது ஆனால் விவசாயின் உழைப்பு சுரண்டப்படும் போது அவர் எங்கே முறையிடுவார்.வேறு வழியின்றி லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.அதற்கு பின்னால் மறைந்துள்ள அவரின் வறுமையை எண்ணி பாருங்கள்..உழைப்பை பாருங்கள்.இனியாவது அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதை தவிர்திடுங்கள். மனிதனை மனதனாக மதிப்போம் மனிதாபிமனத்தோடு வாழ்வோம்.💐💐💐💐💐💐

முக்கிய செய்தி : டெங்கு காய்ச்சல் தடுக்க தேங்காய் எண்ணெய்

முக்கிய செய்தி: டெங்கு காய்ச்சல் ஊரெங்கும் பரவி வருகிறது. நம்மை பாதுகாத்து கொள்ள தேங்காய் எண்ணெய்யை எடுத்து முழங்காளில் இருந்து பாதம் வரை தடவி கொள்ளவும், டெங்கு கொசுக்கள் முழங்காளுக்கு மேல் கடிக்காது, அதுவால் உயர பறக்க முடியாது, மேலும் எண்ணெய் தடவிய இடத்தில் கடிக்காது, தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த கிருமிநாசினி. முடிந்தவரை அனைவருக்கம் பகிரவும்.

அரசு வேலை தேடும் அனைவருக்கும் சென்று சேர்ந்து SOUTHERN RAILWAY RRB ல் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

TNPSC தேர்விற்கு அல்லும், பகலும்  படித்து தேர்வு எழுதிவிட்டு வேலை கிடைக்காதா ? என்று ஏங்கும் தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களே சற்று  உங்கள் பார்வையை RRB(Railway Recruitment Board)பக்கம் திருப்புங்கள்.         1000 GroupD  பதவிகளுக்கு கூட 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துவிட்டு TNPSC மூலமாக ஒரு வேலை வாங்க முடியாதா என ஏங்குகிறோம். மிகவும் சிரமப்பட்டு படிக்கிறோம். நமக்கு நாமே போட்டியை ஏற்படுத்திக்கொள்கிறோம்.       ஆனால், எந்தவித கடினமும்  இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு பணிகளையும் வட மாநிலத்தவர்கள் தட்டிச் செல்கிறார்கள்.இதற்கு காரணம் நம்மிடையே RRB, SSC, UPSC, IBPS, SBI, SAIL, IOCL, BHEL, BEL, BEML, INDIAN POSTAL DEPARTMENT, BANKING EXAM, DEFENCE FACTORY, ISRO...... இன்னும் இது போன்ற பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே.      இவற்றை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.இத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கான விளம்பரம் வரும்போது விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இத்தேர்வில் வ...

குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்க்க ‘பிராக்டிகல் டிப்ஸ்’..!_

குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். உதாரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதி இல்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும். குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும். "அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்" என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டுவிடும். குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப்பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது. பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும். குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்! சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அத...

படித்ததில் வலித்தது மிகவும் சிந்திக்கவேண்டிய* one of the BEST பதிவு

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும் 👉 காரணம், . . . ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்! அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்? பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை! திருமணத்தின் போது அரசாணைக்கால் நட எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை, மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை, குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்? கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிர...

படித்ததில் பிடித்ததால் பதிவிடுகிறேன் : வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதம் income tax தருகிறோம்

வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதம் income tax தருகிறோம் (அரசுக்கு).   மீதி சம்பளத்தில் (28 சதவீதம் GST என வாங்கும் பொருளுக்கு கட்டுகிறோம். பெட்ரோல்  மற்றும் பல பொருட்கள் GST யில் சேர்க்காமல் 60 சதவீதத்திற்கும் மேல் TAX கட்டுகிறோம். மொத்தத்தில்  சராசரி 50 சதவீதம் வாங்கும் பொருளுக்கும் உங்களிடமே (அரசுக்கு) தருகிறோம். ஆக 30+50= 80 சதவீத வருமானத்தை உங்கள்(அரசு) கஜானாவில் சேர்ந்துள்ளவர்களை பார்த்து LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ? என கேட்பவர்கள் கவனிக்க கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!) நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….! (நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! ) சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில் பேசும்போது ” இதுவரை 2.8 லட...

இது மனைவிக்கு மட்டும் இல்லை கணவர்களுக்கு தான்

                             ((((அது ஒரு சைக்காலஜி வகுப்பு)))) ஆசிரியர் வந்து, "இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, "இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார். அந்த பெண்ணும் எழுதினார். பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்... அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்... இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்... அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்.... இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்... இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்... வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்... ...

NEWYORK Times ன் உலக பட்டியலில் தமிழ்நாடு,,,,,

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது... இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான்!!! உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம். இந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான். உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம். உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது,அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான். தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் ந...

வங்கி கணக்குல ரூ.15 லட்சமா..? மோடி சொல்லவே இல்லையே.!

ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் அறிவிப்பின் போது, வெளிநாட்டிலுள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று அறிவித்தார். ஆனால் இன்று வரை அப்பிடி எந்த கருப்பு பணத்தையும் மீட்கவில்லை. வங்கி கணக்குகளில் போடவும் இல்லை. மோடியின் இந்த திட்டங்களை எல்லாம் கேலி செய்து பல அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் பேசி வந்தனர். இந்த நிலையில் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். அதற்கு மாறாக ஒவ்வொருவடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடும் அளவிற்கு கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்று தான் மோடி கூறியதாக, தமிழிசை புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களையும், மோடி ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் போடுவதாக கூறியதையும் பல மேடைகளில் பேசி கேலி செய்து வந்தார். அதற்கு பதிலடி கொடுக்கு...

Amazon Mturk New Account Approved in INDIA

அப்பல்லோ - ஜெ மர்மம் விலகாது ஒரே ஒரு சம்பவத்தை சொல்கிறேன் அப்ப புரியும் ஏன் மர்மம் விலகாது என்று

செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு சென்னையை மூழ்கடிக்கப்பட்ட போது மியாட் மருத்துவ மனையின் முதல் தளம் வரை மூழ்கியது மின் சப்ளை செய்யும் டிரான்ஸ்ஃபார்மர் மூழ்கியது ... மொட்டை மாடியில் வைக்கபட வேண்டிய ஜென்செட் விதிமுறைகள் மீறி  கீழ் தளத்தில் வைத்திருந்ததால் அதுவும் பனால் ஆகி முற்றிலும் மின் சப்ளை காலி .... அதன் காரணமாக ஐசியூவில் இருந்த 12 நோயாளிகள் ஒரே நேரத்தில் மரணம் அடைந்தனர் ... மரணம் அடைந்த நோயாளிகளை ஒரேயொரு பிஆர்ஓ மொத்தமாக ஒரு வண்டியில் அள்ளி போட்டுக்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  வந்து அனாதை பிணங்களை போல போட்டுட்டு போயிட்டாரு .... உறவினர்களுக்கு கூட சரியான தகவல்கள் சொல்லப்படாமல் ..... பிரச்சினை பெரியதானவுடன் உடனே களம்மிறங்கியது மியாட் மருத்துவ மனையின் ஓனரோ அல்லது மருத்துவர்களோ அல்ல .... நேர்மைக்கு பிறந்த நேர்மையையே மூச்சாக கொண்ட கடந்த 12 வருடங்களாக சுகாதார துறையின் செயலரும், முன்னாள் ஜனாதிபதி வெங்கட் ராமனின் பேரனுமாகிய இராதாகிருஷ்ணன் .... ஒரு எப் ஐ ஆர் இல்லை , போஸ்ட்மார்ட்டம் இல்லை , இழப்பீடு இல்லை , விசாரணை இல்லை .. இல்லை இல்லை என்று எதுவும் இல்லாமல் ஆக்க...

மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியா?

நேற்று வரை யஸ்வந்த்சின்கா என்றால் யாரப்பா சிங்களத்து ஆளா என்று கேட்டவர்கள் எல்லாம் இன் று இதோ பாரப்பா சின்காவே சொல்லிட்டார் மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தின் கதை முடிந்து விட்டது என்று அள்ளி விட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் உளறுகிறார்கள் என்றால் அரசு ஊழியர்களும் ஆமாப்பா இந்தியாவி ன் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது என்று சொல்வது தான் வேடிக்கையானது. ஏனென்றால் இன்னொரு சின்கா கொடுத்த அறிக்கை யை வைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு கிட்டதட் ட ஒரு கோடி அரசு ஊழியர்கள் அதாவது 48 லட்சம் இந் நாள் அரசு ஊழியர்கள், 55 லட்சம் முன்னாள் அர சு ஊழி யர்கள் பலன் அடையும் வகையில் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் சுமார் 25% வரை உயர்த்தி மத் தி ய அரசு உத்தரவிட்டுள்ள பொழுது அந்த அரசு ஊ ழியர்கள் இந்தியா பொருளாதார வீழ்ச்சியில் உள்ள து என்று சொல்வதை கேட்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது. கம்யூனிசம் பேசும் கிரீஸ் நாடு இப்பொழுது பொரு ளாதார வீழ்ச்சியில் தான் உள்ளது.அங்கு அரசு ஊழி யர்களுக்கு சம்பளம் இல்லை பென்ஷன் கட். மொத்த த்தில் கிரீஸ் நாடே திவாலாகி விட்டது. நேற்று ஒலி ம்பிக் நடத்திய நா...