Skip to main content

அப்பல்லோ - ஜெ மர்மம் விலகாது ஒரே ஒரு சம்பவத்தை சொல்கிறேன் அப்ப புரியும் ஏன் மர்மம் விலகாது என்று

செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு சென்னையை மூழ்கடிக்கப்பட்ட போது மியாட் மருத்துவ மனையின் முதல் தளம்
வரை மூழ்கியது மின் சப்ளை செய்யும் டிரான்ஸ்ஃபார்மர் மூழ்கியது ... மொட்டை மாடியில் வைக்கபட வேண்டிய ஜென்செட் விதிமுறைகள் மீறி  கீழ் தளத்தில் வைத்திருந்ததால் அதுவும் பனால் ஆகி முற்றிலும் மின் சப்ளை காலி ....

அதன் காரணமாக ஐசியூவில் இருந்த 12 நோயாளிகள் ஒரே நேரத்தில் மரணம் அடைந்தனர் ... மரணம் அடைந்த நோயாளிகளை ஒரேயொரு பிஆர்ஓ மொத்தமாக ஒரு வண்டியில் அள்ளி போட்டுக்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  வந்து அனாதை பிணங்களை போல போட்டுட்டு போயிட்டாரு .... உறவினர்களுக்கு கூட சரியான தகவல்கள் சொல்லப்படாமல் .....

பிரச்சினை பெரியதானவுடன் உடனே களம்மிறங்கியது மியாட் மருத்துவ மனையின் ஓனரோ அல்லது மருத்துவர்களோ அல்ல .... நேர்மைக்கு பிறந்த நேர்மையையே மூச்சாக கொண்ட கடந்த 12 வருடங்களாக சுகாதார துறையின் செயலரும், முன்னாள் ஜனாதிபதி வெங்கட் ராமனின் பேரனுமாகிய இராதாகிருஷ்ணன் .... ஒரு எப் ஐ ஆர் இல்லை , போஸ்ட்மார்ட்டம் இல்லை , இழப்பீடு இல்லை , விசாரணை இல்லை .. இல்லை இல்லை என்று எதுவும் இல்லாமல் ஆக்கினார் .... அந்த அளவுக்கு நேர்மையையே சோத்துல பிசைந்து சாப்பிடும் நேர்மையாளர் .....

இந்த இராதாகிருஷ்ணன் தான் இப்போது வரை சுகாதார துறையின் செயலர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையின் பிஆர்ஓ வேலையைத் தான் பார்த்தாரே தவிர ... அரசு சார்பில் எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் மூடிக்கிட்டு வேடிக்கை மட்டும் பார்த்தவர் .... .

ஒரு நாள் ஆங்கில நாளிதழில் சசிகலா ஜெயலலிதா வழக்கை பயன்படுத்தி ஜெயலலிதா ஜெயிலுக்கு போன பிறகு ஆட்சியை கைப்பற்ற பார்க்கிறார் அது இது என்று ஒரு கட்டுரை வருகிறது .... அதை தொடர்ந்து இன்டலிஜென்ஸ் ரிப்போர்ட் ஒன்று அதையே ஒப்பிக்கிறது  .. பிறகு தான் சசிகலா வெளியேற்றம் ... #இடையில்மோடிஅனுப்பியடாக்டர்கள்நர்ஸ்கட்டுப்பாட்டில்ஜெவருகிறார் பிறகு தான் #ஜெயலலிதாஉடல்நிலை_மோசமாகிறது மீண்டும் சசிகலா உள்ளே வருகிறார் ... சில நாட்களுக்கு பிறகு பொண்ராதா கிருஷ்ணன் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும் என்று பேசுகிறார் அவர் சொன்ன படியே  நடந்து முடிந்தது ..... ஜெயலலிதா இறப்பு நடந்த போது வெங்காய நாயுடு இங்கேயே டேரா போடுகிறார் ஓபிஎஸ் வருகிறார் மீதி எல்லாம் நாம் பார்த்த நாடகங்கள் தான் .....

தினகரன் தைரியமாக சசிகலாவே அப்பல்லோவில  பார்க்க முடியாமல் போனது என்று போட்டுடைக்கவும் , சிபிஐ என்ன இன்டர்போல் விசாரணைக்கும் தயார் என்றவுடன் பிஜேபிக்கு திடீர் ஷாக் அடிக்கிறது அந்த வார்த்தை வந்த பிறகு தான் எல்லோரும் கவர்னர் மீது சந்தேகத்தை கிளப்புகிறார்கள் ..... என்னடா வம்பு என்று இன்று அவரைக் காப்பாற்ற புது  புரோக்கர் ஐ நியமிக்கிரார்கள்

சிபிஐ டெல்லி போலீஸ் ஆக்டில் வரும் ஒரு அமைப்பு தான் தன்னாட்சி அமைப்பு என்று பிலிம் காட்டினாலும் கூட டெல்லவாலாக்களின் அல்சேஷன் பிராணி தான் அது ..... மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு வின் ஒரே மகன் கொலையையே பத்து வருடமாக கண்டுபிடிக்க முடியாத பல் போன கிழட்டு நாய்கள் , இதுவா விசாரணை நடத்தி உண்மையை கொண்டுவரும் ?

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை ஏன் நர்ஸை டாக்டரை அனுப்புனீர்கள் இப்போது அவர்கள் எங்கே ?

 பிரதமராக இருந்தும் ஒரு முதல்வர் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆஸ்பத்திரியில் இருந்தும் ஏன் வந்து பார்க்கவில்லை??

ஜெ கட்டை விரலை காட்டி னாரா ? ஜெ பன்னீர் செல்வத்திடம் இலாக்கா மாற்றி கொடுக்க சொன்னாரா ? பொருப்பு முதல்வராக பன்னீரை நியமிக்க சொன்னாரா ? எப்ப? எப்படி? சொன்னார் என்று ஆளுநர் வித்யாசாகர் இடம் விசாரிக்குமா ?

பொண்ராதாவை எதை வைத்து அப்படி மாற்றங்கள் வரும் னு சொன்னீங்க அதன் மர்மம் என்ன ?

எய்ம்ஸ் டாக்டர்கள் என்ன செய்தார்கள் ? அவர்கள் கண்டறிந்தது என்ன ?

ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து கால்கள் எங்கே ? எப்படி இறந்தார் என்று போஸ்ட்மார்ட்டம் செய்யுமா ?

சிபிஐ போயஸ் கார்டனில் ஆரம்பித்து கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலா இளவரசி இடம் போய் பிறகு அப்பல்லோ வந்து அங்கிருந்து கோட்டைக்கு போய் பன்னீர்செல்வம் எடுபிடி மங்குனி களை விசாரித்து அங்கிருந்து குஜராத் போய் நர்ஸ் டாக்டர் ஐ விசாரித்து மகாராஷ்டிரா போய் ஆளுநரை விசாரித்து அங்கிருந்து டெல்லி போய் மோடி வெங்காய நாயுடுவை விசாரித்து கடைசியாக பொன்ராதா .... பிறகு மொத்தமாக பைலை அலசி துவைத்து இஸ்த்திரி போட்டு ரிப்போர்ட் கொடுப்பதற்க்குள்ள  ....அடப் போங்கப்பா ... நமக்கு  பேரப்பசங்களே வந்துடுவாங்க

அதுவரை சசிகலா வை இருக்க விடமாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன் ..... மொத்த பழியையும் போட்டு சசிகலாவை எளிமினேட் செய்துவிட்டால்.?  பிரச்சனையின் கோணம் யாருக்குமே புரியாம  போய்விடும் ..  ... சசிகலாவிறக்கு அப்போல்லோவில் நடந்த அரசியல் எல்லாம் கண் முன்னே வந்து போகுமா இல்லியா அதனால்தான் பிடிமானம் கையில் இல்லாமல் பிஜேபியை எதிர்க்க முடியாமல் உள்ளுக்குள் குமுறிக்கோண்டு இருக்கிறார் ....

#குஜராத்மும்பைடெல்லிஅப்பல்லோகோட்டை_குமரி
#மர்மவலைப்பின்னல்விசாரிக்குமா_CBI. 

Comments

Popular posts from this blog

ஐந்தின் சிறப்பு அறிவோம் பஞ்சலோகம் முதல் பஞ்சதந்திரம்வரை அ.முதல்..ஔ..வரை

பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால் பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம். #பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) #பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் #பஞ்சலிங்கத்தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம். பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில் #பஞ்சகங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை. #பஞ்சாங்கம் –   திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                         #பஞ்சரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                               ...

கசகசாவின் மருத்துவ குணங்கள்

 கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும். கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும். Please Support our  Azhaghutamil  Channel மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். அபின் செடியின் காய், போஸ்தக்காய் என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது. அபின் செடி காயின் மேல்தோலைக் கீறி வடியும் வெள்ளை நிறமான பால் அபின் எனப்படும். இது, மருத்துவத்திலும் போதைப் பொருளாகவும் பயன்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாகும். கசகசாவில், அதிகமான மயக்கம் மற்றும் போதையைத் தரக்கூடிய பண்புகள் எதுவும் இல்லை. எனவே அபின் எடுக்கப்பட்டுவிட்ட போஸ்தக்காயும் மருத்துவத்தில் பரவலாக பயன்படுகின்றது. கசகசாவும் போஸ்தக்காயும் மளிகைக்கடை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்...

NEWYORK Times ன் உலக பட்டியலில் தமிழ்நாடு,,,,,

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது... இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான்!!! உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம். இந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான். உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம். உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது,அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான். தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் ந...