Skip to main content

வருங்கால தலைமுறையை அழிக்கும் எமனாக நீட்- ஆந்திரா, தெலுங்கானாவில் 50 'அனிதாக்கள்’ தற்கொலை!

ஹைதராபாத்: நீட் தேர்வால் தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் கடந்த 2 மாதங்களில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.


பிளஸ் டூ தேர்வில் 95% மதிப்பெண்கள் பெற்ற சம்யுக்தா என்கிற மாணவி. இவரது தந்தை ஒரு கூலித்தொழிலாளி. மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவின் காரணமாக, கஷ்டப்பட்டு லட்சத்தில் கடன் வாங்கி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தனியார் கோச்சிங் சென்டரில் சேர்த்து இருக்கிறார் அவரது தந்தை. ஆனால், கடந்த திங்கட்கிழமை தனது வீட்டில் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார் சம்யுக்தா.

அவரது மரணக் கடிதத்தில், ' என்னால் மருத்துவர் ஆக முடியுமா என்கிற பயம் தன்னை அலைக்கழிக்கிறது. அதனால் தான் இந்த முடிவு' என்று பதிவு செய்துள்ளார். எனது மகள் எப்படியாவது மருத்துவர் ஆகிவிடுவேன் இந்த மக்களுக்கு அப்போது தான் நல்லது செய்ய முடியும் என்று அடிக்கடி சொல்லுவார். கடந்த சில நாட்களாக இந்த கோச்சிங் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

பாடத்திட்டம் வேறானவை

இதுவரை படித்த பாடத்திட்டமும் இதுவும் வேறுவேறாக உள்ளது என்று நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், இப்போது என் மகளை இழந்துவிட்டேனே. இப்படி எளிய மக்களின் பிள்ளைகளை காவு வாங்கும் தேர்வு அவசியமா? என்று கதறுகிறார் அவரது தந்தை.

50-க்கும் மேற்பட்டோர் தற்கொலை

இப்படி ஆந்திரா தெலுங்கானாவில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது.

பிரச்சனை புரிகிறது

இது அனைத்திற்கும் காரணம் நீட் தேர்வு குறித்து அவர்கள் மீது திணிக்கப்படும் அழுத்தம் தான் என குழந்தைகளுக்கான செயற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதுகுறித்து அஷ்யத ராவ் என்கிற செயற்பாட்டாளர் கூறியதாவது, ' இந்த இரண்டு மாநிலங்களும் இப்போது தான் இந்த பிரச்னையின் வீரியத்தை புரிந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள்.

பள்ளிகள் மீது நடவடிக்கை

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பள்ளிகளும், கல்லூரிகளும் எட்டு மணி நேரம் தான் இயங்க வேண்டும் என்றும், உடல் மற்றும் மனரீதியான தாக்குதல்களை விளைவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அமல்படுத்தி இருக்கிறார்'. மேலும் தற்கொலைக்கு தூண்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை மூடப்பட்டால் தான் மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த அரசின் திட்டமல்ல இந்தத் தேர்வு இது குழந்தைகளின் மீது ஏவப்பட்ட வன்முறை என்றும் விமர்சித்து இருக்கிறார்.

ஆலோசனை தர வேண்டும்

'மாணவர்களுக்கு போட்டித் தேர்வின் மீதான கொடுக்கப்படும் அழுத்தம் தான் அவர்களை இந்த நிலையில் கொண்டு வந்து வைத்திருக்கிறது. கல்வி நிறுவனங்கள், அரசு, ஆசியரோடு இந்த தற்கொலைகளுக்கு பெற்றோருக்கும் இடம் இருக்கிறது' என்கிறார் உளவியல் நிபுணர் வீரபத்ர காண்ட்லா. உடனே இது போல மன அழுத்தத்தில் இருக்கும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இது மேலும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்து இருக்கிறார்.

Comments

Popular posts from this blog

ஐந்தின் சிறப்பு அறிவோம் பஞ்சலோகம் முதல் பஞ்சதந்திரம்வரை அ.முதல்..ஔ..வரை

பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால் பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம். #பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) #பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் #பஞ்சலிங்கத்தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம். பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில் #பஞ்சகங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை. #பஞ்சாங்கம் –   திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                         #பஞ்சரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                               ...

கசகசாவின் மருத்துவ குணங்கள்

 கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும். கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும். Please Support our  Azhaghutamil  Channel மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். அபின் செடியின் காய், போஸ்தக்காய் என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது. அபின் செடி காயின் மேல்தோலைக் கீறி வடியும் வெள்ளை நிறமான பால் அபின் எனப்படும். இது, மருத்துவத்திலும் போதைப் பொருளாகவும் பயன்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாகும். கசகசாவில், அதிகமான மயக்கம் மற்றும் போதையைத் தரக்கூடிய பண்புகள் எதுவும் இல்லை. எனவே அபின் எடுக்கப்பட்டுவிட்ட போஸ்தக்காயும் மருத்துவத்தில் பரவலாக பயன்படுகின்றது. கசகசாவும் போஸ்தக்காயும் மளிகைக்கடை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்...

NEWYORK Times ன் உலக பட்டியலில் தமிழ்நாடு,,,,,

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது... இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான்!!! உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம். இந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான். உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம். உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது,அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான். தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் ந...