ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் அறிவிப்பின் போது, வெளிநாட்டிலுள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் இன்று வரை அப்பிடி எந்த கருப்பு பணத்தையும் மீட்கவில்லை. வங்கி கணக்குகளில் போடவும் இல்லை. மோடியின் இந்த திட்டங்களை எல்லாம் கேலி செய்து பல அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் பேசி வந்தனர்.
இந்த நிலையில் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். அதற்கு மாறாக ஒவ்வொருவடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடும் அளவிற்கு கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்று தான் மோடி கூறியதாக, தமிழிசை புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களையும், மோடி ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் போடுவதாக கூறியதையும் பல மேடைகளில் பேசி கேலி செய்து வந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை தனது டுவீட்டர் பக்கத்தில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் மோடியின் உரையை திரித்துக்கூறி உங்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம்போடுவதாக மோடி சொன்னாரே என 2ஜி ஊழல் விஞ்ஞானிகள் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் எனவும், மோடி பேசிய குறிப்பிட்ட வீடியோவை ஸ்டாலின், அவரின் இந்தி படித்த குழந்தைகளிடம் கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் அறிவிப்பின் போது, வெளிநாட்டிலுள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் இன்று வரை அப்பிடி எந்த கருப்பு பணத்தையும் மீட்கவில்லை. வங்கி கணக்குகளில் போடவும் இல்லை. மோடியின் இந்த திட்டங்களை எல்லாம் கேலி செய்து பல அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் பேசி வந்தனர்.
இந்த நிலையில் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். அதற்கு மாறாக ஒவ்வொருவடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடும் அளவிற்கு கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்று தான் மோடி கூறியதாக, தமிழிசை புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களையும், மோடி ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் போடுவதாக கூறியதையும் பல மேடைகளில் பேசி கேலி செய்து வந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை தனது டுவீட்டர் பக்கத்தில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் மோடியின் உரையை திரித்துக்கூறி உங்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம்போடுவதாக மோடி சொன்னாரே என 2ஜி ஊழல் விஞ்ஞானிகள் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் எனவும், மோடி பேசிய குறிப்பிட்ட வீடியோவை ஸ்டாலின், அவரின் இந்தி படித்த குழந்தைகளிடம் கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment