Skip to main content

Posts

Showing posts from September, 2017

ஆறு அறிவு மனிதன் என்கிறோம். ஆனால் இவனுக்குத்தான் ஓராயிரம் நோய்கள்.

                                        ஆறில் ஆரோக்கியம் !                                        ------------------------------------------ ஆறு விடையத்தை நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது. இதோ ! ---------------- 1 - பசி 2 - தாகம் 3 - உடல் உழைப்பு 4 - தூக்கம் 5 - ஓய்வு 6 - மன அமைதி பசி ! ----------- உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள். யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம். பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும் ! உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடை...

மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் !

மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் ! மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும். இதனால் ரத்...

தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும் உள்ள சம்பந்தம்

தலையாட்டி பொம்மையும்..!! தஞ்சை பெரியகோவிலும்..!! தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும், தஞ்சாவூர்ல அந்த பொம்மை தயாரிக்கப்படுதுங்குறத விட வேற என்ன தொடர்பு ?? இருக்கு... இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ள ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க ! களிமண்ணை வைத்து செய்யப்படும் இந்த தஞ்சாவூர் பொம்மைகள் மிகவும் பாரம்பரியமானவை ! கொட்டங்கச்சி எனப்படும் தேங்காயின் பாதி சிரட்டையின் மேல் களிமண்ணால் செய்யப்பட்ட ராஜா ராணியின் உருவ பொம்மைகளை வைத்து செய்யப்படுகிறது. அந்த பொம்மையோட அடிப்பகுதி கொட்டாங்கச்சியால் செய்யப்பட்டு களிமண்ணால் நிரப்பியிருப்பார்கள் அப்படி செய்யப்பட்டுள்ள பொம்மையை தரையில் வைத்து எந்த பக்கம் சாய்த்தாலும் அது திரும்பவும் ஆடி ஆடி கடைசியாக நேராகிவிடும். ! இதுக்கும் பெரிய கோவிலுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா.! நம்ம பெரிய கோவிலில் சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக போர் போடுவதற்க்க்காக ஆழ்துளை கிணறு தோண்டிருக்காங்க...! தோண்ட தோண்ட களிமண்ணோ, செம்மண்னோ வரவில்லை ஒருவகையான மணல் வந்திருக்கிறது. அந்த மணல் காட்டாறுகளில் காணப்பட கூடிய மணல். சாதரண ஆற்று மணலு...

ஹரஹர மஹாதேவகி தமிழ் சினிமாவுக்கு புதுமையான படமாக இருக்கும்

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியுள்ள ஹரஹர மஹாதேவகி' படத்தை புதுமுக இயக்குநரான சந்தோஷ் P.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் டிரெயிலரை பார்த்தவர்களும், விழா மேடையில் நடந்தவைகளையும் பார்த்தபோது இந்தப் படம் இன்னொரு த்ரிஷா இன்னொரு நயன்தாரா'தான் என்று அடித்துச் சொல்கிறார்கள். இப்போதே அந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் இயக்குநரான சந்தோஷ் பி.ஜெயக்குமார் படம் பற்றி பேசும்போது, "இந்தக் காலத்து இளைஞர்களுக்கு பிடித்த வகையில்தான் இந்த 'ஹரஹர மஹாதேவகி' படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் கவுதம் கார்த்திக் மற்றும் கதாநாயகி நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் ஏற்பட்டு திடீரென்று காதல் முறிவும் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்கள்தான் படத்தின் கதை. கவுதம் கார்த்திக் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர். இந்த சமயத்தில் நான் என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எந்நேரமும் படத்தை பற்றியும், படத்திற்கான இடத்தேர்வு பற்றியும் தீவிரமாக சிந்தித்து கொண்டிருப்பா...

ஐந்தின் சிறப்பு அறிவோம் பஞ்சலோகம் முதல் பஞ்சதந்திரம்வரை அ.முதல்..ஔ..வரை

பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால் பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம். #பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) #பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் #பஞ்சலிங்கத்தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம். பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில் #பஞ்சகங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை. #பஞ்சாங்கம் –   திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                         #பஞ்சரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                               ...

எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்.

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் , குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ் விற்பனையை கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். நல்ல சம்பளம், அதை விட ராஜ மரியாதை, கேட்ட உதவிகள் கேட்பதற்கு முன் வழங்கும் நிறுவனம் , பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர் சம்பாதித்துக்கொண்ட, லாபத்தில் கொழிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடையாள அட்டை என ஒரு பெருமிதத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். வழக்கமாக இதே ரயிலில் வருவதால் வேலை செய்யும் பேன்ட்ரி ஆர்டர்லிகளுடன் ஒரு சிநேகிதம் இருக்கத்தான் செய்தது .தேவையான இடத்தி...

அனைத்து நோய்களுக்கும் ஒரே நிவாரணி தினமும் ஒரு செவ்வாழை!

உலகில் மக்களால் அதிகம் சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அந்த வாழைப்பழத்தில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.  பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது என உடல்நல நிபுணர்களும் கூறுகின்றனர். அதற்காக தினமும் அந்த சத்து நிறைந்த உணவுப் பொருளை தவறாமல் உட்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கூறுகின்றனர். மேலும் பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.  சிறுநீரக கற்களைத் தடுக்கும் செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்...

பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி  எதற்கு பயன்படும்..? அருகம்புல் பொடி அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பொடி பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது கடுக்காய் பொடி குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பொடி அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது அமுக்கரா பொடி தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. சிறுகுறிஞான் பொடி சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நவால் பொடி சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. வல்லாரை பொடி நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. தூதுவளை பொடி நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. துளசி பொடி மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. ஆவரம்பூ பொடி இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். கண்டங்கத்திரி பொடி மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. ரோஜாபூ பொடி  இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். ஓரிதழ் தாமரை பொடி ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், ...

#மோடிக்கு- 💰💰💰ஊழல்_பிடிக்காது.

"கேதான் தேசாய்" இந்த பெயரை மறந்திருக்க மாட்டீர்கள் ! ஆம், அவர்தான் வாஜ்பாய், காலத்தில் மருத்துவ கல்லூரிகளுக்கு, அனுமதி அளிக்கும் மருத்துவ கவுன்சில்தலைவர் பதவியை அலங்கரித்தவர். 🔭 🔬 சிபிஐ,  வருமான வரித்துறையினர் இவர் வீட்டில் 🏚🏡 சோதனை நடத்திய பாேது பறிமுதல் செய்யப்பட்டது எவ்வளவு தெரியுமா ?  மயக்கம் போட்டு விடாதீர்கள்  🌟⭐1300 கிலோ தங்கம் # அது மட்டுமல்ல,💰💰 850 கோடி ரூபாய்  ரொக்கம் !!!    🏰 திருப்பதி ஏழுமலையானுக்கும், இவருக்கும் இந்த விசயத்தில் போட்டி கூட !!! சரி அதற்கென்ன இப்போது என்கிறீரா ? ✋🏻🖐🏿 கறைபடாத கைகள், என வெளியே வந்துவிட்டார்... இந்த(அ)ப்பாவி தான்,  தற்பாேது மோடியின்,       அரசாங்கத்திலும் " நீட் " தொடர்பான முக்கிய முடிவெடுக்கும் இடத்தி்ல் இருப்பவர்.!!! "குஜராத் மெடிக்கல்" கவுன்சில் தலைவராகவும் இருக்கிறார். தற்போது உலக மருத்துவ சங்க தலைவரும் கூட!!! "NEET" க்கும் நம்ம நாட்டுக்கும் உள்ள தொடர்பு இப்போ புரியுமே!!!? ⚖ எப்படி நமக்கு நியாயம் கிடைக்கும் ????? 📣📢 இப்ப எல்லோரும் ஒரு தடவை சத்தமா சொல்...

தமிழ் நாட்டின் தற்போதைய நிலைமை

தமிழ் நாட்டுல, 📚📚📚 4042 நூலகங்கள் இருக்கு, 🍺🍺🍺 6824 டாஸ்மாக் இருக்கு, 📖📖📖 நான் படிக்கவா? 🍻🍻🍻 குடிக்கவா? 10 ஊருக்கு  1 பள்ளிக்கூடம்! 🏫 1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா? 🍸🍸🍸🍸🍸🍸🍸🍸🍸🍸 காய்ச்சி  விற்றால் கள்ளசாராயம்! அரசே விற்றால் நல்ல சாராயமா..! இந்த வருஷம் இவ்வளவு ♨♨♨ பெட்ரோல் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு. இந்த வருஷம் இவ்வளவு 🚗🚗🚗 வாகனங்கள் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு. இந்த வருஷம் இவ்வளவு 🍺🍺🍺 சாராயம் விக்கனும்னு தீர்மானம் அது தமிழ் நாடு... குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம்.. 💵💵💵 போதைல வண்டி ஒட்டுனா 👮👮👮 போலீஸ்க்கு வருமானம்.. அடிபட்டா 👷👷👷 ஆஸ்ப்த்திரிக்கு வருமானம்.. குடிக்கிற உங்களுக்கு 🙇🙇🙇 அவமானம் மட்டுமே..! காலியான சாராய பாட்டில் சொல்கிறது.. 📢📢📢 இன்று உன்னால் நான் காலி நாளை என்னால் நீ காலி...! 👾👾👾 🙈🙉🙊டாஸ்மாக்"-

About Azhaghutamil

Azhaghu Tamil is a YouTube Channel that provides Full Information about Natural Health and Beauty tips, Beauty benefits, Natural Home Remedies, weight loss tips, Skin care tips, pregnancy tips much more in Tamil Language. We are uploading new videos regularly So we hope you like and share our channel with your friends & family. DISCLAIMER : The Information provided on this channel and the videos is for general purposes only and should not be considered as professional advice.We are trying to provide a perfect,valid,specified,detailed information.

NEET தேர்வின் மறைக்கப்படும் உண்மைகள்

நீட் தேர்வு என்பது வெறும் இந்திய மருத்துவர்களின் தரத்தை உயர்த்தும் தேர்வு இல்லை .... சிபிஎஸ்இ அறிவித்து இருக்கும் அறிக்கையில் வந்திருக்கும் சில பயங்கரங்கள் .... நீட் தேர்வு என்பது குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் ... இது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல.... யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ?? 1) இந்தியர்கள் 2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் ) 3) NRI  வெளிநாடு வாழ் இந்தியர்கள் 4) ஓவர்சீஸ் இன்டியன் 5) POI வம்சாவளியினர் எத்தனை பேர் எழுதினார்கள் ?? எத்தனை பேர் பாஸ் 1) இந்தியர்கள் அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 ,  எழுதியவர்கள் 1087840 , பாஸ் செய்தவர்கள் 609000 ... பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ??? அப்ப என்ன டேஷ்க்கு இந்த தேர்வு ?? 2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் ) அப்ளிகேஷனை போட்டவர்கள் 612 எழுதியவர்கள் 391 சீட் வாங்கியவர்கள் 245 .... இவங்களுக்கு மட்டும் எப்படி சீட் கிடைத்தது ?? 3) NRI எழுதியவர்கள் 1370 சீட் வாங்கியவர்கள் 1106 இது எப்படி சாத்தியம் ஆச்சு ?? 4) overseas Indian எழுத...

சிறுநீர் பெருக்கும் முள்ளங்கி

முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும், விதை காமம் பெருக்கும். சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும். 1 முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும். இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும். 2 முள்ளங்கியால் வாத நோய், நீர்வடியும் படையான கரப்பான், வயிற்றெரிச்சல், நரம்பு சூலை எனப்படும் உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும். சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கொர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். 3 பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது. இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு கா...

இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய் !

அனைவருக்கும் இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கெல்லாம் நல்லெண்ணெய் எப்படி உதவுகிறது? என்பதை பார்க்கலாம். * இதற்கு உபயோகப்படுத்தும் நல்லெண்ணெய் சுத்தமாகவும்,      தூய்மையாகவும் மற்றும் கலப்படமின்றியும் இருக்க வேண்டும். * இருமல், தும்மல், காய்ச்சல் உள்ளவர்கள் ஆரம்பமானவுடனே 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் சளி கரையும். மேலும் தும்மல் நின்று, மூக்கில் தண்ணீர் வடிவதும் நின்று விடும். இப்படி செய்வதால் இருமலைக் கட்டுப்படுத்த முடியும். Please Subscribe Our Youtube Channel * கடுமையான இருமலாக இருந்தால் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் போதும் இருமல் நிற்கும். எளிய முறையில் இருமலை விரட்டிவிடலாம். * பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு மூக்கில் சளி வந்து கொண்டிருக்கும். அப்போது ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, அதை தொட்டு எடுத்து மூக்கின் துவாரத்தில் அடிக்கடி தடவ வேண்டும். மூக்கை துடைத்து துடைத்து புண்ணாக்காமல் சுலபமான இந்த முறையின் மூலம் மூக்கிலிருந்து சளியை எளிதாக வரச்செய்து விடலாம். வீட்டில் ...

இஞ்சி குளியல் முறை

நாம் அன்றாடும் சாப்பிடும் உணவுகள் மருந்துகள் மற்றும் குடிக்கும் தண்ணீர், நாம் சுவாசிக்கும் காற்று போன்றவை காரணமாக ஏற்படும் தீங்கு விளைவிக்கும் அசுத்தங்கள் நம் உடலில் அதிக பாதிப்பை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட அசுத்தங்களை  நீக்க இஞ்சி பெரும்பங்கு வகிக்கிறது மிகுவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே நம் உடலிலுள்ள கிருமிகளைக் இயற்கையான முறையில் வெளியேற்றி உடலில் புத்துனராச்சி உண்டாக்க இஞ்சி குளியல் முறை பெரிதும் உதவுகிறது. 1/2 கப் இஞ்சி மற்றும் ஒரு கப் பேக்கிங் சோடா ஆகிய இரண்டு பொருட்களையும் மிதமாக உள்ள சுடுநீரில் கலந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைத்து அந்த நீரில் குளிக்க வேண்டும். இந்த இஞ்சி குளியல் முடித்த ஒரு மணி நேரத்திற்கு பின் அதிக வியர்வை வெளியேறும் எனவே இந்த இஞ்சி குளியல் இரவில் எடுப்பது மிகவும் சிறந்தது. இதனால் சரும துளைகள் விரிவடையும் ஆனால் சோப்பு மற்றும் ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது

சோம்பின் மருத்துவக் குணங்கள்

செரிமான சக்தியைத் தூண்ட: எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும். குடல்புண் ஆற: சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும். வயிற்றுவலி, வயிற்று பொருமல்: அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும். கருப்பை பலம்பெற: கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனை...

முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெற கற்றாழையை பயன்படுத்துங்க

சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி   சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம்   அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப்   போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள    உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும். இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம்   பொலிவு பெறும் . தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை   கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது . தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.   ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும்   கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை   பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் உடனடி தீர்வு கற்றாழைச் சாறுதான். கண்நோய் கண்...

சீரகத்தின் மருத்துவ குணங்கள்

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளை...