Skip to main content

Posts

Showing posts from November, 2017

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி : இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

நாக்பூர் : இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று  முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனையடுத்து ஆடிய இந்திய  இந்திய அணி  6 விக்கெட் இழப்புக்கு 610 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய கேப்டன் கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் 5-வது இரட்டை சதம் இதுவாகும். இதன்மூலம் அதிக இரட்டை சதங்கள் அடித்தோர் பட்டியலில் பிரைன் லாராவுடன் முதல் இடத்தை பகிர்ந்ததோடு சாதனையையும் சமன் செய்துள்ளார்.  முரளி விஜய், புஜாரா, ரோகித் ஷர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினர். இதையடுத்து, 405 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல்அவுட...

மலையாளி, மார்வாடி கொடுத்தா பைனான்ஸ்.. தமிழன் கொடுத்தா கந்துவட்டியா?: சீமான் சாடல்

சென்னை: மலையாளி, மார்வாடிகள் கொடுப்பதற்கு பைனான்ஸ் என்றும் தமிழன் கொடுப்பதற்கு கந்து வட்டி என்றும் பெயரிட்டு அழைப்பதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.  இது தொடர்பாக சீமான் கூறியதாவது: வட்டியில் என்ன கந்து வட்டி? அந்த வட்டி? இந்த வட்டி? மலையாளிகள், மார்வாடிகள் கொடுத்தால் அதற்கு பேரு பைனான்ஸ்... தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா? முத்தூட் பைனான்ஸ் என்றுதான் போடுகிறீர்கள்.. முத்தூட் கந்து வட்டி என்றா போடுகிறீர்கள்? எங்க இருந்து இந்த வார்த்தையை கண்டுபிடிக்கிறீங்க? வட்டி வாங்கும் கட்டாயம்  :  வட்டி என்பது வட்டிதான்... ஏழை எளிய மக்கள் உழைக்கும் மக்கள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கு அரசு ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா? எதுவும் இல்லாத மக்கள் பிள்ளைகளை படிக்க வைக்க என்ன செய்வார்கள்? பிள்ளையை கட்டி கொடுக்க ரூ5 லட்சம் வேண்டும் என்றால் என்ன செய்வார்கள்? வட்டிக்குத்தான் வாங்க முடியும். நீங்க வைக்கிற பெயர் கந்துவட்டி  :  அந்த வட்டிக்கு நீங்க வைக்கிற பெயர் கந்து வட்டி. இவ்வளவுதான் வட்டி கொடுக்க வேண்டும் என அரசு முறைப்படுத்துமா...

நாம இன்னிக்கி யூஸ் பண்ற பொருள் எல்லாம், ஆரம்பக் காலத்துல எப்படி இருந்துச்சு தெரியுமா?

இன்று, ஒரு பொருளின் தரத்தை காட்டிலும் கவர்ச்சியை தான் நாம் அதிகம் விரும்புகிறோம். நம் கையில் இருக்கும் மொபைலாகட்டும், நாம் உடுத்தும் உடையாகட்டும். ஏன் உள்ளாடையாகவே இருந்தாலும் கூட, இரண்டு இன்ச் ஜீன்ஸ் கீழே இறக்கி போடுவதன் காரணம் என்ன, தான் அணியும் பிராண்டை பகட்டாக காண்பித்துக் கொள்ளத்தானே. இன்று ஆஹோ, ஓஹோ என நாம் வாய்பிளந்து காணும் உலகின் பல முன்னணி பிராண்டுகளின் பொருட்கள் ஆரம்பக் காலக்கட்டத்தில் முதன் முதலில் அவை சந்தைக்கு வந்த போது எந்த தோற்றத்தில் இருந்தன தெரியுமா?  இதோ! கோல்கேட் பற்பொடி டப்பா முதல், பார்பி டால், ஆணுறை, ஆப்பிள் கம்பியூட்டர், விண்டோஸ் சாப்ட்வேர் என பலவற்றின் ஆரம்பக் கால தோற்றம்... வாங்க பார்க்கலாம்.... ஆப்பிள்! :  இன்று ஐ-போனின் புதிய மாடல் வருகிறது எனில் அதை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மற்ற நாடுகளில் வர கொஞ்சம் தாமதமாகும் என்பதை கூட யாராலும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. வெளிநாட்டில் இருக்கும் அக்கா, அண்ணன்களிடம் கூறி உடனே வாங்கி அனுப்ப அடம்பிடிக்க ஒரு கூட்டம் இருக்கிறது. ஏனெனில், ஐ-போன் வெறும் மொபைல் அல்ல, ஒருவரின் அந்தஸ்து. இதோ! மரத்தா...

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது ஏன்? எச்.ராஜாவின் புதிய கண்டுபிடிப்பு

தமிழகம் அவ்வப்போது கனமழை, வெள்ளம் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் விஞ்ஞானிகள் இந்த இயற்கை சீற்றங்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலையே காரணம் என்று கூறுகின்றனர். ஆனால்  பாஜக   தேசிய கட்சி செயலாளர் இதுகுறித்து கூறியபோது, கோவில்களில் உள்ள பகவானை பட்டினி போடுவதாலேயே இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும், தமிழக அரசு, கோயில்களை முறையாக பராமரிக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இந்து மதத்தை அழிப்பதே திராவிட இயக்கத்தினரின் குறிக்கோளாக இருப்பதாக குற்றஞ்சாட்டிய எச்.ராஜா, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த 38,000 கோயில்களில் 10,000 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கோவில்களில் பகவானை பட்டினி போடுவதால் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாக கூறப்பட்ட எச்.ராஜாவின் கருத்துக்களுக்கு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

குஜராத்தில் மோடியின் இறுதி ஆயுதம் கண்ணீர் : ஓ.பி.சி பிரிவினர் கூட்டமைப்பின் தலைவர் அல்பேஷ்

அகமதாபாத் : குஜராத் தேர்தலில் பா.ஜ.க.,வை வெற்றி பெற வைக்க இனி மோடியிடம் கைவசம் இருப்பது கண்ணீர் தான் என்று காங்கிரஸிற்கு ஆதரவளித்து வரும் ஓ.பி.சி பிரிவினர் கூட்டமைப்புத் தலைவர் அல்பேஷ் தாகூர் தெரிவித்து உள்ளார். குஜராத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.  தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க ஐந்து கட்டமாக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. காங்கிரஸ் இதுவரை இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை மட்டுமே அறிவித்து உள்ளது. பல்வேறு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  22 ஆண்டுகளாக அங்கு ஆட்சி செய்து வரும் பா.ஜ.க.,வை தோற்கடிக்க காங்கிரஸ் முயற்சி செய்துவருகிறது. ஆளும் பா.ஜ.க.,வின் மீது அதிருப்தியில் இருக்கும் மக்களின் தலைவர்களைத் திரட்டி பா.ஜ.க.,வை எதிர்க்க காங்கிரஸ் வியூகம் வகுத்து இருக்கிறது. ஆதரவளித்த பட்டேல்கள் : இதனடிப்படையில் ஹர்திக் பட்டேல் தலைமையிலான பட்டேல் இன போராட்டக்குழுவிடம் இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக வாக்குறுதி அளித்து ஆதரவ...

டியர் சச்சின் சார்.. உங்கள பாக்கனும் பேசனும்.. குட்டி ரசிகரின் கடிதம்.. நெகிழ்ந்து போன சச்சின்!

ஒரு குட்டி ரசிகரின் கடிதத்திற்கு டிவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுள், கிரிக்கெட் ஜாம்பவான் என்று போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கருக்கு.  இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவருக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சச்சினுக்கு குட்டி ரசிகர் லெட்டர் ஒன்றை தன் கைப்பட எழுதியுள்ளார். டியர் சச்சின் சார்.. என ஆரம்பித்து தன்னை ஜான்ஹவி சமீப் லாட் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த சிறுவன் தான் சச்சினின் மிகப்பெரிய ஃபேன் என்று கூறியுள்ளான். தான் 7ஆம் வகுப்பு படிப்பதாகவும் தனக்கு 12 வயதாவதாகவும் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளான் சிறுவன். தான் ஒரு மகாராஷ்டிரன் என்றும் உங்களை (சச்சின்) பற்றி அதிகம் கேள்வி பட்டிருக்கிறேன் என்றும் அந்த சிறுவன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளான். ஆனால் உங்களை பார்க்கவேண்டும், பேச வேண்டும். ஆனால் அது முடியாது அதனால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்று...

ஒரே டிக்கெட். பஸ்சிலும் போகலாம், டிரெயினிலும் போகலாம். சென்னையில் விரைவில் அறிமுகம் !!!

சென்னையில் ஒரே டிக்கெட் மூலம் மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்றவற்றில் பயணம் செய்யக்கூடிய புதிய முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த  கருத்தரங்கில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசினார். அப்போது சென்னை நகரில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ ரெயிலில் செல்வதற்கும்  ஒரே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது என்றும்  ஆனால் மெட்ரோ ரெயிலில் ஏ.சி.வசதியுடன் , சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறது என்றும் தெரிவித்தார். சென்னையில் 2015-ம் ஆண்டு வெள்ளம் பாதித்தபோதும் மெட்ரோ ரெயில் எந்த தடையுமின்றி இயங்கியது. அப்போது மின்தடை ஏற்பட்டிருந்தாலும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது என கூறினார்.. அண்ணாசாலையில், சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான சுரங்கம் அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும் என்று தெரிவித்த...

ஜெ. வைத்த கைரேகையை தாக்கல் செய்ய பெங்களூரு சிறைக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு!

சென்னை: பெங்களூரு சிறையில் ஜெயலலிதா வைத்த கை ரேகையும் அப்பல்லோவில் வைத்த கைரேகையும் ஒன்றுதானா என அதிரடியாக ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.  இதற்காக பெங்களூரு சிறை நிர்வாகடத்திடம் ஜெயலலிதா கை ரேகையை கேட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடைத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கான வேட்புமனுவில் இடம்பெற்றிருந்த ஜெயலலிதா கைரேகை போலி என திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வருகிறார். இன்றைய வழக்கு விசாரணையின் முடிவில், பெங்களூரு சிறையில் ஜெயலலிதா கைரேகையுடன் இடைத் தேர்தலுக்காக அப்பல்லோவில் ஜெயலலிதா வைத்த கைரேகையை ஒப்பிட சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.  இதையடுத்து ஜெயலலிதாவின் கைரேகையை அனுப்ப பெங்களூரு சிறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் ஆதார் அட்டை கைரேகைகளையும் வரும் 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுக...