நாக்பூர் : இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனையடுத்து ஆடிய இந்திய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய கேப்டன் கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் 5-வது இரட்டை சதம் இதுவாகும். இதன்மூலம் அதிக இரட்டை சதங்கள் அடித்தோர் பட்டியலில் பிரைன் லாராவுடன் முதல் இடத்தை பகிர்ந்ததோடு சாதனையையும் சமன் செய்துள்ளார். முரளி விஜய், புஜாரா, ரோகித் ஷர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினர். இதையடுத்து, 405 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல்அவுட...