Skip to main content

கசகசாவின் மருத்துவ குணங்கள்


 கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும்.

கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும்.



Please Support our Azhaghutamil Channel


மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். அபின் செடியின் காய், போஸ்தக்காய் என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது.

அபின் செடி காயின் மேல்தோலைக் கீறி வடியும் வெள்ளை நிறமான பால் அபின் எனப்படும். இது, மருத்துவத்திலும் போதைப் பொருளாகவும் பயன்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாகும்.

கசகசாவில், அதிகமான மயக்கம் மற்றும் போதையைத் தரக்கூடிய பண்புகள் எதுவும் இல்லை. எனவே அபின் எடுக்கப்பட்டுவிட்ட போஸ்தக்காயும் மருத்துவத்தில் பரவலாக பயன்படுகின்றது.

கசகசாவும் போஸ்தக்காயும் மளிகைக்கடை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி கட்டுப்படும்

½ கோப்பை அளவு கொப்பரைத் தேங்காயைப் பூவாகச் சீவி, ½ தேக்கரண்டி கசகசா சேர்த்து, அரைத்து, துவையலாக்கி, சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.

போஸ்தக்காய் 1, துத்தி இலை ஒரு கைப்பிடியளவு, இவற்றை நன்றாக நசுக்கிக் கொண்டு, 1 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து, சுண்டக் காய்ச்சி, வடிகட்டிக் கொண்டு, சூடு பொறுக்கும் அளவில், பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றடமிட கீல்வாயு குணமாகும்.

உடல் பலம்பெற கசகசா, வால்மிளகு, பாதாம் பருப்பு, கற்கண்டு ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்துக்கொண்டு, நன்கு தூளாக்கி, பசும்பால், தேன், நெய், தேவையான அளவு சேர்த்து, இலேகியமாக செய்து வைத்துக் கொண்டு, ½ தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வேண்டும்

போஸ்தக்காயின் உள்ளேயுள்ள விதை கசகசா எனப்படும். இது குடற்புண்ணை ஆற்றும், உடலிற்கு வலிவு தரும்.

இதனைப் பசுவின் பால் விட்டு அரைத்துப் பிழிந்துபனங்கற்கண்டு சேர்த்துச்சாப்பிடலாம். கஞ்சியாக்கிப் பருகலாம்.

தூக்கமின்மை. வயிற்றில் கிருமி, தினவு, சீதமும் ரத்தமும் கலந்த கடுப்பு, ஜலதோஷம் இவற்றில் கஞ்சியாக்கிச் சாப்பிடலாம்.

கசகசா, வால்மிளகு, பாதாம்பருப்பு, கற்கண்டு வற்றைச் சம அளவு சேர்த்து இடித்துத்தேன் நெய்போதுமான அளவு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் உடல் பழபழப்பும், வலிவும்பெறும்.

ஆண்மையை வளர்க்கும். பெண்கள் மாதவிடாய் காலத்திற்குமுன் ஒருவாரம் இதனைப்பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும்அடிவயிற்று வலிகுறையும்.

மூன்று முதல் ஐந்து பாதாம்பருப்பு மற்றும் அரை ஸ்பூன் கசகசாவையும் பசுவின் பாலில் அரைத்துக் காய்ச்சிச் சாப்பிடப் பிரசவித்த பெண்களுக்குத் தாய்ப்பால் பெருகும்.

 பொதுவாக உடல் வலிவடையவும், பருக்கவும், சூடு தணியவும் ஏற்ற பானம். பருவத்திற்கு வரும் சிறு பெண்களின் வளர்ச்சிக்கும் உடல் புஷ்டி வலிவுபெறவும் ஏற்ற காலை உணவு இது.

கசகசாவை முதல் நாளிரவு ஊரவைத்துக் காலையில் அரைத்துத்தேங்காய்ப்பால், மோர், தயிர் வடித்த கஞ்சி காய்ச்சிய பால் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன்கலக்கி உடலில் பூசிக் குளிப்பதால் அரிப்பு குறையும்.

பாவப்ரகாசர் எனும் முனிவர் கசகசாவைப் பற்றிய வர்ணனையில் போஸ்தக்காயின் மேலோட்டுப் பகுதியை காயவைத்து நன்றாகப்பொடித்துத் தேன்குழைத்து சாப்பிட்டால் பேதியை நிற்குமென்றும், மார்பில் சளி சேர்ந்துஏற்படும் இருமலை குணப்படுத்திவிடுமென்றும் குறிப்பிடுகிறார்.

 மேலும் கசகசாவை ஒருசிறிய அளவில் உணவுடன் சேர்த்து வருபவர்களுக்கு “வாக்விவர்த்தனம்” அதாவதுசொல்வன்மை கூடுமென்றும் எடுத்துரைத்திருக்கிறார்.

நிகண்டுரத்னாகரம் எனும் ஆயுர்வேத அகராதியில் கசகசா குடலில்தேவையற்ற கிருமிகளை அழிக்கக் கூடியது, சோகை மற்றும் காசநோய்களுக்கு நல்லதொரு உணவாகவும் பயன்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 வெண்மை, கருமை, மஞ்சள் மற்றும் பலவர்ணமென நான்கு வகையான வண்ணங்களையுடைய கசகசாவைப் பற்றியசெய்திக் குறிப்பில் வெண்மை நிறமுடைய கசகசாவானது உண்ட உணவை நன்றாக செரிக்கச் செய்யுமென்றும், கருமை நிறமுடையதை அதிக அளவில் உட்கொண்டால் மரணமேற்படுமென்றும், மஞ்சள் நிறமுடைய கசகசாவானது கிழத்தன்மையைப ்போக்குமென்றும், இவற்றின் கலவையை ஒருங்கேகொண்ட வகையானது மலத்தை நன்றாக இளக்கி வெளியேற்றுமென்றும் காணப்படுகிறது.

பத்து கிராம் கசகசாவுடன், ஒரு துண்டு கஸ்தூரிமஞ்சள், ஒரு பிடி வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அம்மைத்தழும்புகள் ஏற்பட்ட முகப்பகுதிகளில் பூசினால் தழும்புகள் மறையத் தொடங்கும்.

வயிற்றுப் போக்கு ஏற்படும் நிலையில் சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில்போட்டு நன்றாக மென்று கொஞ்சம்தண்ணீர் குடித்தால் வயிற்றுப் போக்குகுறையும்.

குளிர்ச்சிதரும் கசகசாவை உணவில் ருசி சேர்ப்பதற்காக அரைத்துச்சேர்ப்பது வழக்கத்தில் உள்ளது.ஆனால் இதனுடைய அளவு கூடுமேயானால் மயக்கத்தை ஏற்படுத்தும்.

கசகசாவிற்கு மயக்கத்தைஏற்படுத்தும் தன்மை இருப்பதால் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்றநாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது
உடம்பிற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது.  ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தோப்புளைச் சுற்றித் தடவினால் அழுகைகுறையும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

பெண்கள் மாதவிடாய் காலத்திற்கு முன் ஒருவாரம் இதனைப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி குறையும்.

கசகசாவை முதல் நாளிரவு ஊற வைத்துக் காலையில் அரைத்து பாசிப்பயறு பொடி, பால் சேர்த்து கலக்கி உடலில் பூசிக் குளிப்பதால் அரிப்பு குறையும். முகம் பொலிவு பெறும்.

வெயிலில் அலைவதால் ஏற்படும் கருமையைப் போக்க கசகசா‌வி‌ற்கு ‌நிக‌ர் வேறு எதுவு‌ம் இ‌ல்லை.

கசகசா‌வி‌ற்கு எ‌ண்ணெ‌ய்ப்பசை‌த் த‌ன்மை இரு‌ப்பதா‌ல் வற‌ண்ட சரும‌த்‌தின‌ர் பய‌ன்படு‌த்தலா‌ம்.

உதடு கருமையாக இரு‌ப்பவ‌ர்க‌ள், கசகசா‌ப் பாலை உத‌ட்டி‌ன் ‌மீது தட‌வி வர, உத‌ட்டி‌ற்கு ந‌ல்ல ‌நிற‌ம் ‌கிடை‌க்கு‌ம்.

செ‌ம்ப‌ட்டை முடியை போ‌க்கவு‌ம் கசகசா உதவு‌ம்.

10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.

Comments

  1. உங்கள் தகவல் மிகவும் பயானுள்ளதாக இருந்ததது . இதில் மேலும் சில பயனுள்ள தகவல் பாருங்க படியுங்கள்... பயன் பெருங்கால் ..கிளிக் செய்யவும் https://www.healthtips4.com/2021/06/poppy-seeds-benefits-and-side-effects-in-tamil.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஐந்தின் சிறப்பு அறிவோம் பஞ்சலோகம் முதல் பஞ்சதந்திரம்வரை அ.முதல்..ஔ..வரை

பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால் பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம். #பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) #பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் #பஞ்சலிங்கத்தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம். பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில் #பஞ்சகங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை. #பஞ்சாங்கம் –   திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                         #பஞ்சரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                               ...

NEWYORK Times ன் உலக பட்டியலில் தமிழ்நாடு,,,,,

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது... இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான்!!! உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம். இந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான். உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம். உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது,அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான். தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் ந...