Skip to main content

அமெரிக்காவை மட்டும் ஏன் அதிகளவில் புயல்கள் தாக்குகின்றன....????


சர்வதேச நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்காவை மட்டும் பல மோசமான புயல்கள் தாக்கி பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேற்கத்திய நாடான அமெரிக்காவை மட்டும் ஏன் புயல்கள் அதிகளவில் தாக்குகின்றன?



இந்த கேள்விக்கான பதிலை இங்கு காண்போம்.

அமெரிக்காவை இதுவரை தாக்கியுள்ள புயல்களில் அதிகளவு ஒரே இடத்தில் இருந்து தான் தோன்றியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களுக்கு மத்தியில் உள்ள அண்டார்ட்டிகா கடலில் தான் இந்த சூறாவளி புயல்கள் தோன்றுகின்றன.


இந்த பகுதி மிகவும் குளிர்ந்துள்ள பிரதேசமாகும்.


இதற்கு அடுத்து ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் கடுமையான வெப்பக்காற்று உருவாகி அது Cape Verde வழியாக பயணமாகிறது. குளிர்ந்த காற்றும், வெப்பக்காற்றும் ஒன்றாக இணையும்போது ஒரு அசுரத்தனமான சூறாவளி உருவாகிறது.

இந்த சூறாவளி காற்று ‘ஆப்பிரிக்காவின் ஜெட்’ என அழைக்கப்படுகிறது. இந்த சூறாவளி மேற்கு நோக்கி வீசுவதால் கியூபா வழியாக அமெரிக்காவை அடைகிறது.

ஆப்பிரிக்காவின் ஜெட் எனப்படும் இந்த சூறாவளி காற்று ஆண்டு முழுவதும் உற்பத்தியாகி வலிமையானதாக உருவாகிறது.  இந்த வலிமையான சூறாவளி செப்டம்பர் மாதங்களில் அதிகளவில் உருவாகிறது.

இந்த சூறாவளி காற்று பூமத்திய ரேகை பகுதியில் உள்ள தண்ணீரில் பலமாக மோதுகிறது. பின்னர், இந்த சூறாவளி காற்று வலுவடைந்து காற்றழுத்த சுழற்சியை உருவாக்குகிறது.

இந்த காற்றழுத்த சுழற்சி இடி மற்றும் பெருமழையை உருவாக்குகிறது. இவ்வாறு மணிக்கு 74 கி.மீ வேகத்தில் காற்று சுற்றும்போது அது புயல் சின்னம் 1 என அழைக்கப்படுகிறது.


இந்த காற்று மணிக்கு 157 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல் சின்னம் 5 என அழைக்கப்படுகிறது.  இது தான் பூமியில் நிகழ்ந்த மிக மோசமான புயல் சின்னமாகும்.

இன்று அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை தாக்க உள்ள இர்மா புயலும் 5 வகையை சேர்ந்தது தான்.
இவ்வாறு அட்லாண்டிக் கடலில் உருவாகும் புயல் சின்னங்களில் பலவும் பல்வேறு தீவு நாடுகள் மீது மோதி வலுவடைந்துவிடுகிறது.

ஆனால், சில புயல்கள் கரீபிய தீவு நாடுகளை தாண்டி அமெரிக்காவை நிலைகுலைய வைக்கிறது.

சில புயல்கள் அமெரிக்கா, மெக்ஸிகோவை தாண்டி சென்று அங்குள்ள தீவு நாடுகளை தாக்குகிறது.

இறுதியாக, அமெரிக்கா மட்டுமின்றி பிற நாடுகளையும் தாக்கும் புயல்கள் அனைத்தும் சஹாரா பாலைவனம் போன்ற வெப்பமான பகுதிகள் உருவாகும் காற்று மூலமே உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.                        

Comments

Popular posts from this blog

ஐந்தின் சிறப்பு அறிவோம் பஞ்சலோகம் முதல் பஞ்சதந்திரம்வரை அ.முதல்..ஔ..வரை

பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால் பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம். #பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) #பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் #பஞ்சலிங்கத்தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம். பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில் #பஞ்சகங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை. #பஞ்சாங்கம் –   திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                         #பஞ்சரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                               ...

கசகசாவின் மருத்துவ குணங்கள்

 கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும். கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும். Please Support our  Azhaghutamil  Channel மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். அபின் செடியின் காய், போஸ்தக்காய் என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது. அபின் செடி காயின் மேல்தோலைக் கீறி வடியும் வெள்ளை நிறமான பால் அபின் எனப்படும். இது, மருத்துவத்திலும் போதைப் பொருளாகவும் பயன்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாகும். கசகசாவில், அதிகமான மயக்கம் மற்றும் போதையைத் தரக்கூடிய பண்புகள் எதுவும் இல்லை. எனவே அபின் எடுக்கப்பட்டுவிட்ட போஸ்தக்காயும் மருத்துவத்தில் பரவலாக பயன்படுகின்றது. கசகசாவும் போஸ்தக்காயும் மளிகைக்கடை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்...

NEET தேர்வின் மறைக்கப்படும் உண்மைகள்

நீட் தேர்வு என்பது வெறும் இந்திய மருத்துவர்களின் தரத்தை உயர்த்தும் தேர்வு இல்லை .... சிபிஎஸ்இ அறிவித்து இருக்கும் அறிக்கையில் வந்திருக்கும் சில பயங்கரங்கள் .... நீட் தேர்வு என்பது குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் ... இது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல.... யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ?? 1) இந்தியர்கள் 2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் ) 3) NRI  வெளிநாடு வாழ் இந்தியர்கள் 4) ஓவர்சீஸ் இன்டியன் 5) POI வம்சாவளியினர் எத்தனை பேர் எழுதினார்கள் ?? எத்தனை பேர் பாஸ் 1) இந்தியர்கள் அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 ,  எழுதியவர்கள் 1087840 , பாஸ் செய்தவர்கள் 609000 ... பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ??? அப்ப என்ன டேஷ்க்கு இந்த தேர்வு ?? 2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் ) அப்ளிகேஷனை போட்டவர்கள் 612 எழுதியவர்கள் 391 சீட் வாங்கியவர்கள் 245 .... இவங்களுக்கு மட்டும் எப்படி சீட் கிடைத்தது ?? 3) NRI எழுதியவர்கள் 1370 சீட் வாங்கியவர்கள் 1106 இது எப்படி சாத்தியம் ஆச்சு ?? 4) overseas Indian எழுத...