Skip to main content

முகப் பராமரிப்புவீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஸ்பேக்குகள்





முகப் பராமரிப்புவீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஸ்பேக்குகள்

வாட்டர் மெலான் ஃபேஸ்பேக்

தர்பூசணியின் சதைப்பகுதி மற்றும் விதைகள் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு 1/2 டீஸ்பூன் அரிசிமாவு, 1/4 டீஸ்பூன் கடலைமாவு, 1/4 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் கை கால்களில் பேக் மாதிரி போட்டுக் கொள்ள வேண்டும். 1/2 மணிநேரம் கழித்து முகத்தைக்கழுவலாம்





 கிரேப்ஸ் ஃபேஸ்பேக்

கருப்பு திராட்சையை(விதை உள்ளது) விதையோடு ஈரம் போக நன்றாக துடைத்துவிட்டு ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து, அந்த விழுதுடன் 1/4 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து காற்றுப்புகாத டப்பாவில் போvட்டு 2 நாட்கள் அப்படியே வைத்துவிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. 2 நாட்கள் கழித்து பார்த்தால் மேலாக வெள்ளை நிறத்தில் ஏடுபோல் படிந்து இருக்கும்.
இதுதான் அல்ட்ரா ஹைட்ராசில் ஆசிட். இது தோலில் ஏற்படும் கருமையை உடனடினியாக குறைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. 2 நாட்களுக்கு ஒருமுறை கண்களைச் சுற்றி, முகம், கழுத்து, கை, கால்களில் போடும்போது தோலில் ஏற்படும் சுருக்கம், கருமையை நீக்கிவிடும். வெயில் காலத்தில் கண்களில் ஏற்படும் சோர்வையும் போக்கிவிடும்.


பைனாப்பிள் ஃபேஸ்பேக்

நன்றாக பழுத்த பைனாப்பிளின் மேல்தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை அரைத்து ஒரு மெல்லிய துணியால் வடிகட்டி சாறினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதோடு வெள்ளை சோளமாவு 1 டீஸ்பூன், தயிர் 1/2 டீஸ்பூன், லெமன் ஆயில் 5 சொட்டுகள் கலந்து 3 மணிநேரம் அப்படியே வைத்துவிட வேண்டும். பைனாப்பிள் ஜூஸில் இருக்கும் என்சைம் மற்றும் சோளமாவு கலந்த இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.
மேற்சொன்ன எல்லா ஃபேஸ்பேக்குகளையுமே தயாரித்து 10 நாள்வரை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம். இது எல்லாவற்றையுமே முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்து முதலில் சற்று சூடான நீரிலும், பின்னர் குளிர்ந்த நீரிலும் கழுவ வேண்டும்.
               
 உடல் அசதி குறைய

கிராம்பு, நிலவேம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அசதி குறையும்.  ஒரு டம்ளர் அன்னாசிபழ‌ச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து  தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும். மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டுவர உடல் சோர்வு குறையும்

உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

ஐந்தின் சிறப்பு அறிவோம் பஞ்சலோகம் முதல் பஞ்சதந்திரம்வரை அ.முதல்..ஔ..வரை

பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால் பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம். #பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) #பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் #பஞ்சலிங்கத்தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம். பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில் #பஞ்சகங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை. #பஞ்சாங்கம் –   திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                         #பஞ்சரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                               ...

கசகசாவின் மருத்துவ குணங்கள்

 கசகசா இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும். கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும். Please Support our  Azhaghutamil  Channel மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா ஆகும். அபின் செடியின் காய், போஸ்தக்காய் என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது. அபின் செடி காயின் மேல்தோலைக் கீறி வடியும் வெள்ளை நிறமான பால் அபின் எனப்படும். இது, மருத்துவத்திலும் போதைப் பொருளாகவும் பயன்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாகும். கசகசாவில், அதிகமான மயக்கம் மற்றும் போதையைத் தரக்கூடிய பண்புகள் எதுவும் இல்லை. எனவே அபின் எடுக்கப்பட்டுவிட்ட போஸ்தக்காயும் மருத்துவத்தில் பரவலாக பயன்படுகின்றது. கசகசாவும் போஸ்தக்காயும் மளிகைக்கடை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்...

NEET தேர்வின் மறைக்கப்படும் உண்மைகள்

நீட் தேர்வு என்பது வெறும் இந்திய மருத்துவர்களின் தரத்தை உயர்த்தும் தேர்வு இல்லை .... சிபிஎஸ்இ அறிவித்து இருக்கும் அறிக்கையில் வந்திருக்கும் சில பயங்கரங்கள் .... நீட் தேர்வு என்பது குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் ... இது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல.... யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ?? 1) இந்தியர்கள் 2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் ) 3) NRI  வெளிநாடு வாழ் இந்தியர்கள் 4) ஓவர்சீஸ் இன்டியன் 5) POI வம்சாவளியினர் எத்தனை பேர் எழுதினார்கள் ?? எத்தனை பேர் பாஸ் 1) இந்தியர்கள் அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 ,  எழுதியவர்கள் 1087840 , பாஸ் செய்தவர்கள் 609000 ... பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ??? அப்ப என்ன டேஷ்க்கு இந்த தேர்வு ?? 2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் ) அப்ளிகேஷனை போட்டவர்கள் 612 எழுதியவர்கள் 391 சீட் வாங்கியவர்கள் 245 .... இவங்களுக்கு மட்டும் எப்படி சீட் கிடைத்தது ?? 3) NRI எழுதியவர்கள் 1370 சீட் வாங்கியவர்கள் 1106 இது எப்படி சாத்தியம் ஆச்சு ?? 4) overseas Indian எழுத...